திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், 2.10.15-ல் திருமஞ்சன அபிஷேகம் நடந்தது. திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் உள்ள கனகவல்லி தாயாருக்கு, காலை, 9:30 மணியளவில், திருமஞ்சனம் நடந்தது. பின், அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரங்கள் நடந்தன. இதைத்தொடர்ந்து, மாலையில் உள்புறப்பாடு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.