மழை வேண்டி திருநள்ளார் கோவிலில் நந்திக்கு வர்ண ஜப பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05அக் 2015 11:10
காரைக்கால்: மழை வேண்டி திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் நேற்று நந்திக்கு வர்ண ஜப பூஜை நடந்தது. காரைக்கால் மாவட்டம் காவிரியின் கடை மடைப்பகுதியில் உள்ளது. பருவமழை பொய்த்ததாலும், காவிரியில் தண்ணீர் வரததால், காவிரி டெல்டா மாவட்டங்களில் ப யிரிடப்பட்ட சம்பா நெல் கருகி வருகிறது. நந்திகேஸ்வரருக்கு வருண ஜப பூஜை செய்தால் மழை பெய்யும் என்ற ஐதீகத்தின்படி நேற்று திருநள்ளார் கோவிலில் வருண ஜப பூஜை செய்ய திட்டமிடப்பட்டது. இதற்காக, திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலி க்கும் தர்பாரண்யேஸ்வரர் நேர் எதிரே சங்கு மண்டபத்தில் அருள்பாலிக்கும் நந்திகேஸ்வரர் சிலையைச் சுற்றி செயற்கையாக உருவாக்கப்பட்ட தொட்டியில் தண்ணீர் நிரப்பபட்டது. வருண ஜபம் விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது. பூன்யாவாஜனம் நடத்தப்பட்டு சகல திரவியங்களால் நந்திகேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து கலசாபிஷேகம் நடத்தப்படுகிறது. பின் வருண ஜபம் செய்யப்பட்டது. பூஜையில் தர்மபுர ஆதீனம் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சாமிகள் கலந்து கொண்டார். கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் கூறுகையில். வறட்சி நீங்கி பயிர்கள் செழித்து விவசாயம் வளம்பெறவும், உலக நன்மை வேண்டி கிராம மக்கள், விவசாயிகள், பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த பூஜை நடத்தப்பட்டுள்ளது. கடந்த 7 வருடத்திற்கு முன் வறட்சியாக பாதிக்கப்பட்ட நிலையில் இதுபோல் பூஜை செய்தபின் மழை பெய்த பயிர்கள் செழிப் பானது. அதைக்கருத்தில் கொண்டே இப்போது பூஜை நடத்தப்பட்டது என்று கூறினார்.