சதுர்த்தி அன்று முழுவிரதம் இருந்து விநாயகர் பெருமானுக்கு கொழுக்கட்டை (மோதகம்), அப்பம், பட்சண வகைகள், கரும்பு, அவல், விளாம்பழம், நாவற்பழம், பலாப்பழம், கொப்பரைத் தேங்காய், சுண்டல் ஆகியவை படைத்து பூஜை செய்ய வேண்டும். விநாயகருக்கு பிடித்த வெள்ளை நிற எருக்கம் பூ, அருகம்புல், தாமரை, புன்னகம், தும்பை, வில்வம் உள்பட அனைத்து இலை வகைகள் கொண்டு பூஜிக்க வேண்டும்.