நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் பவித்ரோத்சவம் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07அக் 2015 10:10
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் நேற்று பவித்ரோத்சவம் துவங்கியது.காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் பவித்ரோத்சவம் நேற்று முன் தினம் வாஸ்து ஹோமத்துடன் துவங்கியது. காலை பவித்ர பிரதிஷ்டை, கும்ப பூஜை, சக்ரத்தாழ்வார், ஆவாஹனம், பூர்ணாஹூதி நடந்தது. ரங்கநாத பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தினம் சுவாமி வீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் மற்றும் நித்யகல்யாண பக்த ஜனசபாவினர் செய்திருந்தனர்.