பதிவு செய்த நாள்
07
அக்
2015
11:10
ஆனைமலை: ஆனைமலை பகுதிகளில் உள்ள கோவில்களில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர். அங்கலகுறிச்சியில், பிரசித்தி பெற்ற காலசம்ஹார பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள பைரவர், தீப் பிழம்பு போன்ற தங்கநிறமுடி, அகோர பற்கள், ஆனந்தமான பார்வையுடன், நாய் வாகனத்தின் மீது நின்ற கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஆனைமலை பெரிய கடை வீதி ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீரங்கநாத பெருமாள் கோவிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. சுவாமிக்கு, பால், தயிர், தேன், சந்தனம், திருமஞ்சனம், இளநீர், மஞ்சள், பன்னீர், குங்குமம் ஆகிய 9 திரவியங்களால் அபிேஷகம் செய்யப்பட்டன. இதையடுத்து, வெட்டிவேர் மாலை கொண்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. நிகழ்ச்சியில் நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.