அவிநாசி: வெள்ளியம்பாளையம் அழகு நாச்சியம்மன் கோவிலில், 13ம் ஆண்டு பொங்கல் விழா நடைபெற்றது. கணபதி பூஜை, அம்மனுக்கு விசேஷ, அபிஷேக பூஜை நடைபெற்றது. மாரியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம் செய்விக்கப்பட்டது. நேர்ந்து கொண்ட பெண்கள், பொங்கல் வைத்து வழிபட்டனர். விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மஞ்சள் நீர் அபிஷேகத்துடன், விழா நிறைவுற்றது. காணி அழகுத்தேவன் கூட்டத்தை சேர்ந்த பக்தர்களும், வெள்ளியம்பாளையம் கிராமத்தினரும் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, கோவில் கமிட்டி நிர்வாகிகள், செய்திருந்தனர்.