பதிவு செய்த நாள்
08
அக்
2015
11:10
காரைக்கால்: நித்ய கல்யாணப் பெருமாள் கோவிலில், பவித்ரோத்சவத்தை முன்னிட்டு நேற்று கும்ப பூஜை, ஹோமம் நடந்தது. காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள நித்ய கல்யாண பெருமாள் கோவிலில், பவித்ரோத்சவ விழா கடந்த 5ம் தேதி புண்யாஹவாசனம், வாஸ்து ஹோமத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் பவித்ர பிரதிஷ்டை, கும்ப ஆவாஹனம், கும்ப பூஜை, சக்கரத்தாழ்வார் ஆவாஹனம், பூர்ணாஹூதி நடந்தது. நேற்று காலை மற்றும் மாலையில் கும்ப பூஜை, ஹோமம், பூர்ணாஹூதி, யுக்த ஹோமம் நடந்தது. முன்னாதாக ரங்கநாத பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பவித்ரோத்சவத்தையொட்டி தினமும் மாலை 5.௦௦ மணிக்கு பெருமாள் வீதி உலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் மற்றும் நித்ய கல்யாண பக்த ஜனசபாவினர் செய்துள்ளனர்.