பதிவு செய்த நாள்
09
அக்
2015
11:10
விழுப்புரம்: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில்களுக்கான பூஜை பொருட்கள் வழங்கும் விழா, விழுப்புரத்தில் நடந்தது. தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள கோவில்களில் பூஜை செய்வதற்கான பொருட்கள் இந்து சமய அறநிலைய துறை மூலம் வழங்கப்படுமென முதல்வர் ஜெ., அறிவித்திருந்தார். இதை யொட்டி மாவட்டத்தில் உள்ள 400 கோவில்களுக்கு பூஜை பொருட்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான துவக்க விழா, விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் நடந்தது. அறநிலைய துறை இணை ஆணையர் வாசுநாதன் தலைமை தாங்கினார். சேர்மன் பாஸ்கரன் வரவேற்றார். மாவட்ட அ.தி.மு.க., இளைஞரணி செயலாளர் பசுபதி, முன்னாள் ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு, அறங்காவலர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கிராமப்புறங்களில் உள்ள கோவில் பூசாரிகளுக்கு பூஜை பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை, முன்னாள் அமைச்சர் சண்முகம் வழங்கினார். கவுன்சிலர்கள் வழக்கறிஞர் செந்தில், சாகுல்அமீது, சுமதிபன்னீர்செல்வம், வரதன், ராமதாஸ், ஒன்றிய கவுன்சிலர் ராஜு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். எம்.ஜி.ஆர்., மன்ற தலைவர் தனுசு, தொகுதி செயலாளர் ராமச்சந்திரன், வார்டு செயலாளர் குமரன், அண்ணாமலை, பால் நுகர்வோர் கூட்டுறவு சங்க துணை தலைவர் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.