பதிவு செய்த நாள்
09
அக்
2015
11:10
பெங்களூரு: மஹாளய அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு பஸ்களை கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாகம் இயக்குகிறது.கே.எஸ்.ஆர்.டி.சி., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மஹாளய அமாவாசையை முன்னிட்டு, இன்றும், நாளையும் மைசூரு சாலை பஸ் நிலையம், பீன்யாவிலுள்ள பசவேஸ்வரா பஸ் நிலையம், விஜயநகர் டி.டி.எம்.சி., கங்கா நகர், மல்லேஸ்வரம், 18வது கிராஸ் பஸ் நிலையம் உட்பட, பெங்களூரு நகரின் மற்ற பேருந்து நிறுத்தங்களில் இருந்து கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட உள்ளன.முன்பதிவு செய்யாத வாகனங்கள் ஹாசன், மங்களூரு, சிக்கமகளூரு, ஷிவமொகா, தாவணகரே, ஹூப்பள்ளி, பல்லாரி, ஹொசபேட் செல்லும் பஸ்கள், கெம்பே கவுடா மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து பசவேஸ்வரா பஸ் நிலையம், பீன்யா வழியாக செல்லும்.மைசூருக்கு செல்லும் முன்பதிவு செய்யாத வாகனங்கள், மைசூரு சாலை பஸ் நிலையத்திலிருந்து புறப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.