விழுப்புரம்: விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் ஆனந்த வரதராஜ பெருமாள் கோவிலில் கும் பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து மாலை 5:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயாரோடு வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. இரவு 7:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை அப்பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.