ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நவராத்திரி விழா அக்.,12ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10அக் 2015 10:10
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நவராத்திரி விழா அக். 12ல் துவங்கி தொடர்ந்து 11 நாட்கள் நடக்கிறது. ஒவ்வொருநாளும் பர்வதவர்த்தினி அம்மன் பல அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். அக். 12ம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நடக்கிறது. 13ல் மக்களுக்கு பசிபிணி போக்கும் அன்னபூரணி அலங்காரம், 14ல் மகாலெட்சுமி அலங்காரம், 15 ல் சிவதுர்க்கை அலங்காரம், 16ல் சரஸ்வதி அலங்காரம், 17ல் கௌரி சிவபூஜை அலங்காரம், 18ல் சாரதாம்பிகை அலங்காரம், 19ல் கெஜலெட்சுமி அலங்காரம், 20ல் மஹிஷாஸிரமர்த்தினி அலங்காரம், 21ல் துர்க்கா, லெட்சுமி, சரஸ்வதி அலங்காரம் நடக்கிறது. விஜயதசமியான அக். 22ம் தேதி பர்வதவர்த்தினி அம்மன் வன்னி நோம்பு திட்டையில் அம்பு எய்தும் நிகழ்ச்சியுடன் நவராத்திரி விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செல்வராஜ் செய்து வருகிறார்.