திருநள்ளார் சனிபகாவன் கோவிலில் க்யூ காம்ப்ளக்ஸ் திறப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10அக் 2015 11:10
காரைக்கால்: திருநள்ளார் சனிபகாவன் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக ரூ.4.76 கோடி மதிப்பில் க்யூ காம்ப்ளக்ஸ் பணிகள் முடிக்கப்பட்டு இன்று முதல் பக்தர்களுக்கு பயன்பாட்டுக்கு தொடங்கப்பட்டுள்ளது. காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நவரகிரக ஸ்தலங்களில் சனி பரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்குகிறது. இதனால், நாட்டின் பல பகுதியில் இருந்தும் பக்தர்கள் தினம் திருநள்ளாரில் குவிகின்றனர். இதனால் பக்தர்கள் வசதிக்காக கோவில் நகர திட்டத்தில் மூலம் க்யூ காம்ப்ளக்ஸ் கட்டும் பணிகள் நடைபெற்றது. நளன் குளத்தில் நீராடிவிட்டு தர்பாரண்யேஸ்வரர் கோவில் செல்லும் வழியாக சுமார் 750 மீட்டர் அளவில் ரூ.4.76 கோடி செலவில் பக்தர்கள் வரிசையில் செல்லும் வகையில் வணிகவளாகம், கழிவறை, ஒய்வுகூடம் மற்றும் தண்ணீர்,மின்விசிறி உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன் புதுச்சேரி முதல்வரால் திறக்கப்பட்டது.மேலும் பொதுப்பணித்துறை மூலம் சில பணிகள் முடிக்கப்படாத நிலையில் நேற்று முடிக்கப்பட்ட பணிகளை நேற்று கலெக்டர் வல்லவன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சண்முகசுந்தரம், கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு உடன் இருந்தனர்.
கலெக்டர் வல்லவன் கூறுகையில்..: திருநள்ளார் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக க்யூகாம்ப்ளக்ஸ் ரூ.4.76 கோடி செலவில் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. இருப்புறம் 2 வரிசையாக பக்தர்கள் அமர்ந்து செல்ல கட்டைகள், ஒரு ஒய்வு அறை சுமார் ஆயிரம் போர் அமரக்குடியது, 10 வணிகவளாகம், கேன்டீன், டிக்கெட்கவுண்டர். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் மோற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பணிகள் முடிக்கப்பட்டு இன்று முதல் பக்தர்கள் வசதிக்காக க்யூ காம்ப்ளக்ஸ் திறக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.