அய்யாவாடி பிரத்தியங்கிரா கோயிலில் நிகும்பலா யாகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12அக் 2015 04:10
மயிலாடுதுறை: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த அய்யாவாடியில் மகா பிரத்தியங்கிரா தேவி கோயில் உள்ளது. இங்கு ராவணன் மகன் மேகநாதன், பஞ்சபாண்டவர்கள் அம்பாளை பூஜித்து வேண்டிய வரங்களை பெற்றுள்ளனர். அமாவாசை தோறும் இந்த கோயிலில் மிளகாய் வற்றல் கொண்டு நடத்தப்படும் நிகும்பலா யாகம் சிறப்பானது.
மண், பெண், பொன் ஆசைகளை விட்டு இந்த நிகும்பலா யாகத்தில் கலந்து கொண்டு அம்பாளை வேண்டினால், சத்ரு உபாதைகள் யாவும் நீங்கி, சகல நன்மைகள் கிடைக் கும். புரட்டாசி மாதம் மற்றும் மஹாளய அமாவாசையை முன்னிட்டு, காலை அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்பாள் கோயில் மண்டபத்தில் எழுந்தருள பூஜைகள் நடைபெற் றன. மதியம் 1 மணிக்கு 16 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத பாண்டூர் சதாசிவ குருக்கள் யாக குண்டத்தில் மிளகாய் வற்றல் கொட்டி நிகும்பலா யாகத்தை நடத்திவைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளை தரிசனம்செய்தனர். யாகத்திற்கான ஏற்பாட்டை சங்கர் குருக்கள் செய்திரு ந்தார். அம்மாவாசையை முன்னிட்டு கும்பகோணத்தில் இருந்து அய்யாவாடிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.