விருதுநகர் ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் தங்க சிற்பங்கள் தயார்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13அக் 2015 11:10
விருதுநகர்;விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் தங்க விமான பணிக்காக 2 கோடி ரூபாய் செலவில், 76 கிலோ தங்கத்தில் சிற்பங்கள் பொறிக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது.
இன்னும் ஒரு வாரத்தில் விமானத்தில் பொருத்தப்பட உள்ளது. இக்கோயில் கோபுர தங்க விமான பணி கடந்த 2012ல் ஆண்டாள் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் துவக்கப்பட்டது. தமிழ்நாடு , கேரளா , பெங்களூரு, ஆந்திரா உட்பட பல மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் தங்கத்தை காணிக்கையாக வழங்கினர். பக்தர்களிடம் திரட்டிய 76 கிலோ தங்கம் மூலம் இப்பணி நடந்து வந்தது. தங்கத்தை தகடுகளாக மாற்றி சிற்பங்கள் தயாரிக்கும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளாக துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் நடந்து வந்தது.
தற்போது அப்பணிகள் நிறைவு பெற்று உள்ளது. கோயில் நிர்வாக அதிகாரி ராமராஜா கூறுகையில்,“ தங்க சிற்பங்கள் பொறிக்கும் பணி நிறைவுபெற்று விட்டது. ஒரு வாரத்தில் விமானத்தில் சிற்பங்கள் பொறித்த தங்க தகடுகள் பொருத்தப்படும்,” என்றார்.