தீபாவளியன்று அதிகாலையில் நீராடி, புத்தாடைகள் அணிந்து, சாமி கும்பிட்ட பின், வீட்டில் தீபங்கள் ஏற்றினால், வீடு லட்சுமிகரமாக திகழும் என, விஷ்ணு புராணம் கூறுகிறது. அதேபோல், தீபாவளியன்று மாலை, வீட்டிற்கு வெளியே வீட்டை சுற்றி தீபங்கள் ஏற்றினால், அதைப் பார்க்கும் யமதர்மராஜன் திருப்தியடைவான்; இதனால், அவ்வீட்டில் யாருக்கும் அகால மரணமோ, நரக பயமோ ஏற்படாது என்று பவிஷ்யோத்ர புராணம் கூறுகிறது.