மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) பதவி உயர்வு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17நவ 2015 02:11
நட்புக்கு முன்னுரிமை அளிக்கும் மிதுன ராசி அன்பர்களே!
சூரியன்,சனி, சுக்கிரன் ஆகிய கிரகங்களால் நன்மை உண்டாகும். டிச.1க்கு பிறகு புதன் சாதகமற்ற நிலைக்கு சென்று விட்டாலும் பாதிப்பு ஏற்படாது. செயலில் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சமூக மதிப்பு அதிகரிக்கும். திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சி இனிதே நடைபெறும். வீட்டுத் தேவை அனைத்தும் பூர்த்தியாகும். டிச. 1 க்கு பிறகு கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பது நல்லது. விருந்து, விழா என சென்று மகிழ்வீர்கள்.
தொழில், வியாபாரத்தில் பணவரவுக்கு குறைவிருக்காது. மாத முற்பகுதியில் லாபம் கணிசமாக கிடைக்கும். டிச. 10,11ம் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்க வாய்ப்புண்டு.
பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பணியிடத்தில் செல்வாக்கு மேம்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு நல்ல முறையில் கிடைக்கும். டிச.1க்குப் பிறகு செயலில் நிதானம் தேவை.
கலைஞர்களுக்கு எதிர்பார்த்த புகழ் கிடைக்கும். புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்கப் பெறுவர்.
அரசியல்வாதிகள் உழைப்புக்கு ஏற்ற பலனை எதிர்பார்க்க முடியாது.
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். ஆசிரியர்களின் ஆலோசனையை பின்பற்றினால், வளர்ச்சி கூடும். டிச.1 க்கு பிறகு சிரத்தையுடன் படிப்பது நல்லது.
விவசாயிகள் நெல், கோதுமை, கேழ்வரகு, சோளம், காய்கறி வகைகள் போன்ற பயிர்கள் மூலம் நல்ல மகசூலைப் பெறுவர். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கை கூடாமல் போகலாம். பசு மற்றும் கால்நடை மூலம் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.
பெண்கள் குடும்பத்தில் நற்பெயர் எடுப்பர். உறவினர்களுடன் இணக்கமுடன் இருப்பர். டிச. 1 க்கு பிறகு கணவனிடம் விட்டுக் கொடுத்து போகவும்.