பதிவு செய்த நாள்
17
நவ
2015
02:11
துணிவும், செயல்திறனும் மிக்க கடக ராசி அன்பர்களே!
புதன் டிச.1ல் சாதகமான இடத்திற்கு வருகிறார். சுக்கிரன்,செவ்வாய்,குரு,ராகு ஆகியோராலும் நன்மை தொடரும். பக்தி உயர்வு மேம்படும். எதையும் வெற்றிகரமாக செய்து முடிக்கும் வல்லமை பெறுவீர்கள். பணப் புழக்கம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி மேலோங்கும். கணவன்-மனைவி இடையே பிரச்னை அகலும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாத பிற்பகுதியில் உறவினர்களிடம் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். உறவினர் வருகையால் நன்மை கிடைக்கும். டிச. 5,6 ல் ஆடை, அணிகலன் வாங்குவீர்கள். டிச.1 க்குப் பிறகு திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி நடந்தேறும்.
தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை மேம்படும். பகைவர் தொல்லை டிச.1 க்குப் பிறகு இருக்காது. புதிய வியாபார முயற்சி வெற்றி பெறும். டிச.12,13ல் எதிர்பாராத நன்மை உண்டாகும்.
பணியாளர்களுக்கு இடமாற்றம் ஏற்படலாம். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள்,டிச. 1க்கு பிறகு ஒன்று சேருவர்.
பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக அமையும். சிலர் உயர் பதவி கிடைக்கப் பெறுவர்.
கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்கும். விருது அல்லது பாராட்டு கிடைக்க வாய்ப்புண்டு.
அரசியல்வாதிகளுக்கு நல்ல வளர்ச்சியும், தொண்டர் மத்தியில் செல்வாக்கும் உண்டாகும்.
மாணவர்கள் கல்வியில் சிறந்த நிலையில் இருப்பர். போட்டியில் பங்கேற்று வெற்றி காண்பர்.
விவசாயிகள் அதிக மகசூலை பெறுவர். எள், கரும்பு, கீரைவகைகள், பழ வகைகள் மூலம் நல்ல மகசூல் கிடைக்கும். கால்நடைச் செல்வம் பெருகும்.வீடு-மனை வாங்க யோகம் கூடி வரும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
பெண்கள் குடும்பத்தில் நற்பெயர் பெறுவர். கணவனின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.
நல்ல நாள்: நவ.17, 18, 23, 24, 25, 26, 27, 30, டிச.1, 5, 6,12, 13, 14, 15, 16
கவன நாள்: நவ.19, 20 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 2,3
நிறம்: வெள்ளை, சிவப்பு, நீலம்
பரிகாரம்: தினமும் சூரியனை தரிசனம் செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். ஆஞ்சநேயரை சனியன்று வழிபடுங்கள்.