மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) அரசின் சலுகை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17நவ 2015 02:11
விட்டுக் கொடுக்கும் இயல்புள்ள மகர ராசி அன்பர்களே!
புதன்,சுக்கிரன் டிச. 1 வரை நற்பலன் கொடுப்பர். சூரியன்,சனி, கேதுவால் நன்மை மேலோங்கும். மற்ற கிரகங்கள் திருப்தியற்ற நிலையில் இருந்தாலும் பிரச்னை உண்டாகாது. புதிய முயற்சியில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். பொருளாதார வளம் சிறக்கும். சமூகத்தில் மதிப்பு கூடும். அரசு வகையில் உதவி கிடைக்கும். குடும்பத்தில் முன்னேற்றமான கால கட்டமாக அமையும். பெண்களால் நன்மை உண்டாகும். கணவன்- மனைவி இடையே அன்பு பெருகும். உறவினர்களால் நன்மை கிடைக்கும். சிலருக்கு புதிய வீடு, மனை வாங்க யோகம் உண்டாகும்.
தொழில், வியாபாரத்தில் அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். விரிவாக்க முயற்சி வெற்றி பெறும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை மேலோங்கும். டிச.1 க்கு பிறகு எதிரியால் தொல்லை உருவாகலாம். நவ. 28,29 ல் எதிர் பாராத வகையில் பணவரவு கிடைக்கும்.
பணியாளர்கள் சீரான முன்னேற்றம் காண்பர். அரசு ஊழியர்களுக்கு கோரிக்கை எளிதில் நிறைவேறும். ராணுவம் மற்றும் காவல்துறையில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவர். டிச. 1 க்கு பிறகு சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரித் தாலும் அதற்குரிய வருமானம் கிடைக்கும். டிச. 7,8,9 ல் எதிர் பாராத நன்மை கிடைக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்கப் பெறுவர். சக பெண் கலைஞர்கள்ஆதரவுடன் இருப்பர். நவ. 30 க்கு பிறகு போட்டி அதிகரிக்கும்.
அரசியல்வாதிகள் எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கப் பெறுவர்.
மாணவர்கள் மாத முற்பகுதியில் புதன் சாதகமாக இருப்பதால் நல்ல பலன் காணலாம். போட்டியில் பங்கேற்று வெற்றி காண்பர். டிச.1க்கு பிறகு கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும்.
விவசாயிகள் கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் காண்பர். புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம். பெண்கள் குடும்பத்தாரின் நன்மதிப்பை பெறுவர். புனித தலங்களுக்கு சென்று வருவர். பிறந்த வீட்டிலிருந்து சீதனம் கிடைக்கும்.