நவ.30க்கு பிறகு சுக்கிரன்,புதன் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பர். குரு, சூரியனாலும் நற்பலன் தொடர்ந்திடும். மற்ற கிரகங்கள் சுமாரான நிலையில் இருக்கின்றன. பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். நினைத்தது விரைவில் நிறைவேறும். குடும்பத்தில் வசதி பெருகும். மனதில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். மாத முற்பகுதியில் பெண்களின் ஆதரவு இருக்கும். பொன், பொருள் சேரும். கணவன்-மனைவி இடையே அன்பு மேலோங்கும். நவ. 19,20ம் தேதிகளில் சகோதரிகளால் முன்னேற்றம் உண்டாகும். நவ. 23,24,25ம் தேதிகளில் ஆடை, அணிகலன்கள் வாங்கலாம்.
தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். பெண்களை பங்குதாரராக கொண்ட தொழிலில் அமோக லாபம் கிடைக்கும். புதிய முதலீட்டு விஷயத்தில் கவனம் தேவை.
பணியாளர்கள் மேலதிகாரிகளின் மத்தியில் நன்மதிப்பு பெறுவர். கோரிக்கைகள் எளிதில் நிறைவேறும். சக பெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. டிச. 10,11ம் தேதிகளில் நல்ல பலனை எதிர்நோக்கலாம்.
கலைஞர்களுக்கு சுக்கிரன் சாதகமாக காணப்படுவதால் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.
மாணவர்கள் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவர். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர்.
விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற வருமானம் பெறுவர். நெல், கோதுமை, சோளம், பழ வகைகள் மூலம் அதிக லாபம் கிடைக்கப் பெறுவர். கால்நடை வகையில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும்.
பெண்கள் மகிழ்ச்சியாக காணப்படுவர். குடும்பத்திற்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் செயல்படுவர். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். தனியார் துறையில் வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். டிச. 2,3,4ம் தேதிகளில் பிறந்த வீட்டுச் சீதனம் வரும்.