பதிவு செய்த நாள்
18
நவ
2015
10:11
சபரிமலை: சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் நேற்று தொடங்கியது. முதல் நாளிலேயே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.கார்த்திகை 1 முதல் 41 நாட்கள் நடக்கும் பூஜைகள் மண்டல காலம் என அழைக்கப்படுகிறது. நேற்று (கார்த்திகை ௧) அதிகாலை 4 மணிக்கு புதிய மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி, கோயில் நடை திறந்து தீபம் ஏற்றியவுடன் மண்டல காலம் தொடங்கியது.ஐயப்பனுக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு அபிஷேகங்கள் செய்து, நெய் அபிஷேகத்தை தொடங்கி வைத்தார்; கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து உஷ பூஜை, உச்சபூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழபூஜைகள் நடந்தன.நடை திறந்து போது பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 18- படி ஏறுவதற்காக சரங்குத்தி வரை பக்தர்கள் வரிசை இருந்தது.இந்நிகழ்ச்சியில் தேவசம்போர்டு அமைச்சர் சிவகுமார், போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன், செயலாளர் ஜெயக்குமார், கூடுதல் டி.ஜி.பி., பத்மகுமார் பங்கேற்றனர்.பின், சபரிமலையை பக்தர்களே சுத்தமாக பராமரிக்கும் புண்ணியம் பூங்காவனம் திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார். பக்தர்கள் வழிபாடுகளை நடத்தவும், வழிபாடு பொருட்களை சமர்ப்பிக்கவும் கூடுதல் கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.