பழநி: கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பழநி மலைக்கோயிலில் சண்முகர், வள்ளி,தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. பழநி மலைக்கோயிலில் கந்தசஷ்டி விழா நவ.12ல் காப்புகட்டுதலுடன் துவங்கியது. கோயில் யானை கஸ்துõரி மலைக்கோயிலில் தங்கி பக்தர்களுக்கு அருள் ஆசிவழங்கியது. முக்கிய நிகழ்ச்சி நேற்று சூரசம்ஹாரம் நடந்தது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு மலைக் கோயிலில் படத்துகுருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்ரமணியம் தலைமையிலான குழுவினர் விநாயகர் பூஜையுடன், ஆறு கலசங்கள் வைத்து சண்முகர், வள்ளி தெய்வானைக்கு சிறப்பு கலச புனிதநீரில் அபிஷேகம், சிறப்பு ஹோம பூஜை நடந்தது. பேரி, வாத்ய பூஜை, மங்களவாத்தியங்கள் முழங்க காலை 11.45 மணிக்கு மாங்கல்ய தாரணமும் மாலை மாற்றுதலும் நடந்தது. அதைத்தொடர்ந்து தீபாராதனையும், வேத பாராயணமும் நடந்தது. திருமணகோலத்தில் சண்முகர், வள்ளி,தெய்வானை அருள்பாலித்தனர். பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.