Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூரிய பகவானை வணங்கும் சத் பூஜை ... சோலைமலை முருகன் கோயில் திருக்கல்யாணம் சோலைமலை முருகன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் மழை: பம்பையில் வெள்ள அபாயம்!
எழுத்தின் அளவு:
சபரிமலையில் மழை: பம்பையில் வெள்ள அபாயம்!

பதிவு செய்த நாள்

19 நவ
2015
10:11

சபரிமலை: சபரிமலையில் தொடர்ச்சியாக தினமும் மாலையில் கொட்டி தீர்க்கும் மழையால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.  சபரிமலையில் கடந்த 17-ம் தேதி முதல் மண்டலகால பூஜை நடைபெற்று வருகிறது. தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்  மலையேறி தரிசனம் நடத்தி வருகின்றனர்.கார்த்திகை முதல் நாள் மாலை ஆறு மணிக்கு மழை பெய்தது. தொடக்கத்தில் சாரலாக  பெய்த மழை நேரம் செல்ல செல்ல அதிகரித்து இரவு கொட்டி தீர்த்தது. மலையேறி களைப்பில் வந்த பக்தர்கள் தங்க இடம் இல்லாமல்  தவித்தனர். இந்நிலையில் நேற்றும் அதே நேரத்தில் மழை பெய்தது. இதனால் பக்தர்கள் தங்கும் இடத்துக்காக அலைந்தனர். பொதுவாக  சபரிமலையில் திறந்த வெளியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்குவது வழக்கம். அது முடியாமல் போனதால் இரவு முழுவதும்  கட்டிடங்களில் ஓரங்களில் நின்று கொண்டிருந்தனர்.  மழை வரும் போது பக்தர்கள் தங்குவதற்கு கூடுதல் ஷெட்டுகள் அமைக்க  வேண்டும் என்று பக்தர்கள் விரும்புகின்றனர். பம்பையில் வெள்ள அபாயம்: சபரிமலையில் நேற்று இரவும் பலத்த மழை பெய்தது.  இதனால் பம்பையில் நீர் வரத்து அதிகரித்தது. பம்பை நதிக்கரையில் திருவேணியில் வாகனங்கள் பார்க்கிங் செய்யப்படுவது வழக்கம்.  திடீர் என்று பெய்த பெருமழையால் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதை தொடர்ந்து தீயணைப்புத்துறையினரும், போலீசாரும் இணைந்து  கார்களை கயிற்றால் கட்டி மரத்தில் கட்டினர். இதை தொடர்ந்து சன்னிதானத்தில் ஒலிபெருக்கி மூலம் திருவேணியில் பார்க்கிங் செய்த  பக்தர்கள் உடனடியாக பம்பைக்கு செல்லும் படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். பக்தர்கள் குளிக்கவும் இரவு தடை விதிக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar