Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமநாதபுரம் ராமகிருஷ்ண சேவா ... திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கு பட்டாபிஷேகம் திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் மஹாதீபம் கொப்பரைக்கு சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 நவ
2015
10:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், மஹாதீபம் ஏற்ற பயன்படுத்தப்பட உள்ள கொப்பரைக்கு நேற்று சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின் மலை உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது.

Default Image

Next News

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா, கடந்த, 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று, 8ம் நாள் விழா நடந்தது. அதில், பஞ்சமூர்த்திகள், குதிரை வாகனத்தில் ஸ்வாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 4மணிக்கு, தங்கமேரு வாகனத்தில் பிச்சாண்டவர் வீதி உலா நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்வான மஹா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி, நாளை (25ம் தேதி) நடக்கிறது. அதை முன்னிட்டு, விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகம் செய்து, தயார் நிலையில் உள்ளது. மஹாதீபம் ஏற்றப்படும் கொப்பரை, நேற்று மலை உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. முன்னதாக, அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. அப்போது, கோவில் யானை ருக்கு, கொப்பரையை துதிக்கையால் வணங்கியது. பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என கோஷம் எழுப்பி வழிபட்டனர். இதையடுத்து, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சிக்கு, தீப கொப்பரை எடுத்துச் செல்லப்பட்டது. தீபம் ஏற்ற பயன்படுத்தப்பட உள்ள, 1,000 மீட்டர் காடா துணி, திருப்பூரிலிருந்து வரவழைக்கப்பட்டு, அதற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. கொப்பரையில் ஊற்றுவதற்காக, 3,500 கிலோ நெய், ஆவின் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் செலுத்தும் நெய் காணிக்கையை பெறுவதற்கு கோவில் நிர்வாகம் தனி கவுண்டரை கோவிலில் அமைத்துள்ளது. தீப திருவிழாவிவை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில், நாளை உள்ளூர் விடுமுறை அளித்து, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தீப திருவிழாவிவை முன்னிட்டு, கோவில் வளாகம் மற்றும் கோபுரம், வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, காண்பதற்கு கண் கொள்ளா காட்சியளிக்கிறது. தீப திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar