பதிவு செய்த நாள்
24
நவ
2015
10:11
கோவை: வெள்ளியங்கிரி மலையில் திருக்கார்த்திகையன்று, அணையா தீபமும், கிரிவலமும் நடக்க உள்ளது. திருவண்ணாமலையில் திரு க்கார்த்திகையன்று தீபம் ஏற்றப்படுவது போல், ‘தென்கயிலை’ என்றழைக்கப்படும், வெள்ளியங்கிரிமலையில், திருக்கார்த்திகையன்று, மகா தீபக்கொப்பரையில், தீபம் ஏற்றப்படுகிறது. ‘தென்கயிலை அணையா தீபக்கருவூலம்’ அமைப்பு சார்பில், 9 வது ஆண்டாக, அணையாதீப ஆன்மிக ப்பயணத்தை, நேற்று மாலை,6:00 மணிக்கு, பேரூர் ஆதினத்தில், ஆதினம் சாந்தலிங்கராமசாமி அடிகள் துவக்கி வைத்தார். வெள்ளியங்கிரி மலையிலுள்ள முதல் மலையில் அமைந்துள்ள, வெள்ளை விநாயகர் கோவிலில், பேரூராதீனம் இளையபட்டம் மருதாசல அடிகளார் அணையா தீபத்தை ஏற்றி வைத்தார். இன்று காலை 5:30 மணிக்கு, வெள்ளை விநாயகருக்கு அணையா தீப பூஜையை நிறைவு செய்து, ஆறாவது மலையான அர்ஜுனன் குன்றை சென்றடையும். அங்கு அன்னதானம், தீப வழிபாடு மற்றும் பஜனைகள் நடைபெறும்.
நாளை(புதன்கிழமை) காலை 11:00 மணிக்கு, அணையா மகா தீபக்கொப்பரை, கிரிமலை புறப்பட்டு, தென்கயிலை, கைலாசநாதர் ஜோதீஸ்வரரு டன், வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மாலை 3:00 மணிக்கு, அணையாதீபம் ஏற்றப்பட்டு கிரிவலம் வருகின்றனர். தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு, அணையாதீபத்திலிருந்து பரணி தீபம் ஏற்றப்படுகிறது. 6:30 மணிக்கு, பரணி தீபத்திலிருந்து மகா தீபம் ஏற்றப் படுகிறது. ஜோதி தரிசனத்துக்கு பின், ஆறாவது மலையிலிருந்து, தீப வழிபாட்டு கூடத்துக்கு அணையா தீபம் வந்தடையும். அங்கு பஜனை பாடி தீப வழிபாடு நடைபெறும். இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்கலாம், வெள்ளிங்கிரி மலை ஏறும் பக்தர்களுக்கு, இலவசமாக சித்தமருத்துவ பரி÷ சாதனை செய்து கொள்ளலாம். கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி தொடர்ந்து அன்றாடம், விழா நிகழ்ச்சிகள் நிறைவடையும் வரை, மகா அன்னதானம் வெள்ளியங்கிரி மலையில் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.