விழுப்புரம்: விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம் நடந்தது. விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலி ல், கவுசிக ஏகாதசியையொட்டி நேற்று காலை 7:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு அகண்டநாம பஜனை, இரவு 7:00 மணிக்கு கருட வாகனத்தில் வைகுண்டவாச பெருமாள், கோவில் உட்பிரகார வீதியுலா நடந்தது.