திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவின் 10ம் நாளான இன்று(நவ.25) அதிகாலை 03.30 மணி அளவில் ஸ்வாமி சன்னதி மூல கருவறை முன் “ ஏகன் அனேகன்” என்பதை குறிக்கும் வகையில் 5 மடக்குகளில் பஞ்சமுகதீபத்தை கண்ணன் குருக்ககள் ஏற்றினர்.
பின்பு அதிகாலை நான்கு மணிக்கு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் தங்ககொடிமரம் முன் கணேசன் குருக்கள் பரணி தீபத்தை கையிலேந்தி உள்ள மடக்கில் ஜோதி ரூபமாய் இருக்கும் “அண்ணாமலையார்” பக்தர்களுக்கு காட்சியளிக்கும் வைபோகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் “அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தி கோஷத்துடன் தரினசம் செய்தனர். இன்று மாலை 6 மணிக்கு மலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.