பதிவு செய்த நாள்
25
நவ
2015
11:11
விருத்தாசலம்: பிரதோஷத்தையொட்டி, விருத்தகிரீஸ்வரர், பிரளயகாலேஸ்வரர் கோவில்களில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. வி ருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று காலை ஆழத்து விநாயகர், சுவாமி, அம்மன், சண்முக சுப்ரமணியர் சுவாமிகளுக்கு சிறப்பு அபி÷ ஷக ஆராதனை நடந்தது. நேற்று முன்தினம் மாலை நுாற்றுக்கால் மண்டபத்தில் உள்ள நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம் உட்பட 12 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் அருகம்புல் மாலைகள் சாற்றி தீபாராதனை நடந்தது.
பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் சுவாமி கோவிலில் நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், தேன் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.