மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் மகா தீபம் ஏற்றம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25நவ 2015 06:11
திருச்சி: கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு, திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் மகா தீபம் ஏற்றபட்டது.
மலைக்கோட்டை தாயுமான ஸ்வாமி கோவிலில், கார்த்திகை திருநாளை முன்னிட்டு, மாலை, 5 மணிக்கு செவ்வந்தி விநாயகர், தாயுமான ஸ்வாமி, மட்டுவார்குழலம்மை, உற்சவர் மூர்த்திகளுக்கு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, மாலை, 6 மணிக்கு, மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில் சன்னதி முன் உள்ள, 50 அடி உயர தீப ஸ்தம்பத்தில் வைக்கப்பட்டுள்ள கொப்பறையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.