பதிவு செய்த நாள்
26
நவ
2015
10:11
ராமநாதபுரம் : கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு ராமநாதபுரத்தில் உள்ள முருகன் கோயில்களில் சொக்கபனை கொழுத்தப்பட்டன. கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு ராமநாதபுரம் வழிவிடு முருகன், குண்டுக்கரை சொக்கநாதசுவாமி, மேல்கரை முருகன், சிவன்கோயில் பாலதண்டாயுதபாணி, குயவன்குடி சாது சுப்பையா, மண்டபம் ரயில்வே ஸ்டேஷன் கதிர்காம தி வடிவேல் முருகன், காந்தி நகர் சண்முகசடாச்சர முருகன், பாம்பன் பாலசுப்ரமணியசுவாமி கோயில்களில் சிறப்பு அலங்காரத்தில் முருகன் அருள்பாலித்தார். இரவில் சொக்கப்பனை கொழுத்தப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட மக்கள் நலன் வேண்டி வைசியாள் வீதியில் உள்ள ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நட்சத்திர லட்ச தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்று கார்த்திகை தீபம் ஏற்றி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் ஆர்ய வைஸ்ய மகா சபை, ஸ்ரீகன்னிகா மகளிர் மன்றத்தினர் செய்தனர்.
* திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு விளக்குகள் ஏற்றடுப்பட்டன. முருகனுக்கு சந்தன அலங்காரம் செய்யபட்டது. வள்ளி, தெய்வானையுடன் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லிதாயாருக்கு நடந்த சிறப்பு, தீப, ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.