காரைக்குடி : கார்த்திகையை முன்னிட்டு குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. சண்முகநாத பெருமான் ஆறு திருமுகங்களோடும், பன்னிரு கரங்களோடும் எழுந்தருளியுள்ள சிறப்பு வாய்ந்தது குன்றக்குடி. மயிலின் வடிவாக காட்சியளிக்கும் இத்திருத்தலத்தில் நேற்று கார்த்திகை தீபமேற்றும் நிகழ்ச்சி நடந்தது. பகல் 11.30 மணிக்கு மலை உச்சியில் சுவாமி கீழிறங்கி, கார்த்திகை மண்டபத்தில் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளினார். மாலை 5.30 மணிக்கு குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன பூஜை மடத்தில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி,குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில், சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. 6 மணிக்கு கார்த்திகை மடத்தில் சுவாமிக்கு வழிபாடு நடத்தப்பட்டு, 6.30 மணிக்கு மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து சுவாமி வீதி உலா நடந்தது.
* காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் கார்த்திகை விழா கொண்டாடப்பட்டது. மாலை 6.15 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது.