மாமல்லபுரம்: திருக்கழுக்குன்றம், பக்தவச்சலேஸ்வரர் கோவிலுக்குள், தேங்கிய மழைநீர் வடியாமல் உள்ளது. திருக்கழுக்குன்றம், சதுரங்கப்பட்டினம் சாலையில் பக்தவச்சலேஸ்வரர் கோவில் உள்ளது. தொடர்ந்து பெய்த கன மழையால், இக்கோவில் வளாகத்தில் உள்ள, ரிஷப தீர்த்த குளம் நிரம்பியது. நேற்று முன்தினம் பெய்த மழையில், குளத்திலிருந்து உபரிநீர் வெளியேறி, கோவில் வளாகத்தை சூழ்ந்துள்ளது. கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், ‘குளத்தின் வடிகால்வாய்களை அடைத்து, வீடுகள் கட்டப்பட்டதே தண்ணீர் வழியாததற்கு காரணம். தற்போது, வளாகத்தில் உள்ள தண்ணீரை, மோட்டார்கள் மூலம் வெளியேற்றி வருகிறோம்’ என்றனர்.