பதிவு செய்த நாள்
27
நவ
2015
06:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா முடிந்ததை யொட்டி உண்ணாமலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் மற்றும் பராசக்தியம்மன் காலையில் கிரிவலம் செனறனர். இதில் வெளிநாட்டு பக்தர்கள் முதல் ஏராளமான பக்தர்கள் உடன் சென்று தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை கோவிலில், இன்று (நவ.,27) அருணாசலேஸ்வரர் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோயிலில் நேற்று முன்தினம் மஹாதீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, மலை உச்சியில், 11 நாட்களுக்கு தீபம் எரியும். தொடர்ந்து, மூன்று நாட்கள் தெப்ப திருவிழா நடைபெற்றுவருகிறது. இன்று உண்ணாமுலையம்மன் சமேதரராய் அருணாசலேஸ்வரர் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கிரிவலப்பாதை முழுவதும் பக்தர்கள் ஸ்வாமிக்கு மண்டகப்படி செலுத்தி வழிபட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.