புதுச்சேரி: பிள்ளைச்சாவடி சீரடி சாயிபாபா கோவிலில், மூன்றாம் ஆண்டு குத்துவிளக்கு வழிபாடு நேற்று நடந்தது. பிள்ளைச்சாவடி சீரடி சாயிபாபா கோவிலில், ஆண்டு தோறும் குத்துவிளக்கு வழிபாடு நடக்கிறது. நேற்று நடந்த பூஜையில் பெண்கள் குத்துவிளக்கேற்றி, பிரார்த்தனை செய்தனர். இரவு 8.00 மணிக்கு சாயிபாபாவிற்கு தீபாராதனை காண்பித்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சீரடி சாய்பாபா சேவா சமிதி நிர்வாகிகள் செய்திருந்தனர்.