நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவிலில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது. நெல்லிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவிலில் கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் அம்மனுக்கும், பெருமாளுக்கும் சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. இரவு பெருமாள் சிற ப்பு அலங்காராத்தில் எழுந்தருள சொக்கப்பனை ஏற்றப்பட்டது. பூஜைகளை குணசேகரன், கணேஷ் பூசாரிகள் செய்தனர். சுந்தரமூர்த்தி, கிருஷ்ணமூ ர்த்தி, ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர். சொக்கப்பனை எரிந்த சாம்பலை நிலத்தில் போட்டால் விளைச்சல் நன்றாக இருக்கும் என்ற நம்பி க்கையில் விவசாயிகள் சொக்கப்பனை சாம்பலை எடுத்து சென்றனர். புதுச்சத்திரம்: வேளங்கிப்பட்டு விநாயகர் கோவில், சேந்திரக்கிள்ளை விநாய கர், முனியனார், மன்மதன், மாரியம்மன் கோவில்கள், நொச்சிக்காடு மாரியம்மன் கோவில், சந்திரநாயகபுரம் பாலமுருகன் கோவில், சிலம்பிம ங்களம் விநாயகர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. முக்கிய நிகழ்வாக சொக்கப்பனை எரிக்கும் நிகழ்ச்சி இரவு 7:00 மணிக்கு நடந்தது.