கள்ளக்குறிச்சி: செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் செம்பொற்÷ ஜாதிநாதர் கோவிலில், திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, அதிகாலை 5:00 மணிக்கு பரணி தீபம் ஏற்றினர். மாலை 5:59 மணிக்கு ராஜ÷ காபுரத்தில் அகண்ட தீபமேற்றப்பட்டது. தொடர்ந்து கோவிலில் செம்பொற்ஜோதிநாதர் விக்ரகம் முன், 1008 நெய்தீப விளக்குகளை பக்தர்கள் ஏற்றினர். முன்னதாக கோவிலில் திருமுறை விண்ணப்பம் வைத்து, திருவாசகம் முற்றோதல் நிகழ்த்தப்பட்டது.