பதிவு செய்த நாள்
28
நவ
2015
10:11
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், மகாவிஷ்ணு தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. பொள்ளாச்சி லட்சுமி நரசிம்மர் கோவிலில், மகாவிஷ்ணு தீபத்தையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, மாலையில், மகா விஷ்ணு தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், மகாவிஷ்ணு தீப விழா நடந்தது. விழாவையொட்டி, மாலை, 4:10 மணிக்கு அபிேஷகம், அலங்கார பூஜைகளும், மாலை, 6:10 மணிக்கு மகா விஷ்ணு தீபம் ஏற்றுதல், தீபாராதனை தரிசனம் மற்றும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பொள்ளாச்சி வரதராஜப்பெருமாள் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், மகா விஷ்ணு தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.