பதிவு செய்த நாள்
28
நவ
2015
11:11
புதுச்சேரி: லாஸ்பேட்டை சாந்தி நகர், வலம்புரி வெற்றி விநாயகர் கோவில், கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 23ம் தேதி துவங்கியது. 24ம் தேதி மகாலட்சுமி ஹோமம், கோபூஜை நடந்தது. 25ம் தேதி முதல் கால யாக பூஜை துவங்கியது.26ம் தேதி காலை 8.00 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை, மாலை 6.00 மணிக்கு மூன்றாம் காலயாக பூஜை நடந்தது. நேற்று காலை 7.00 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும், 9.30 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடும், சரியாக 10.00 மணியளவில், வெற்றி விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சிவசுப் ரமணியர், செல்வ முத்துமாரியம்மன் கோவில், கோபுர கலசத்திற்கு, புனித ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. மயிலம் ஆதினம் சிவஞான பாலய சுவாமிகள் நடத்தி வைத்தார். வைத்தியநாதன் எம்.எல்.ஏ., நந்தா சரவணன், சிவக்கொழுந்து, பா.ஜ., சுவாமிநாதன் பங்கேற்றனர்.