பொள்ளாச்சி: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள வேட்டைக்காரன்புதுார் அழுக்குசாமியார் கோவிலில், 96ம் ஆண்டு குருபூஜை விழா நடந்தது. இதில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்று வழிபட்டார். அப்பா பைத்தியசாமி சித்தரை வணங்கிய அவர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். நிருபர்களிடம் அவர் கூறுகையில், ”புதுச்சேரியை தனி மாநிலமாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம். இதற்காக மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும். குரு பூஜை விழாவில் ஆண்டுதோறும் பங்கேற்பது வழக்கம். அதுபோலவே இந்தாண்டும் வந்துள்ளேன்,” என்றார்.முன்னதாக, கோவிலுக்கு வந்த புதுச்சேரி முதல்வரை, கோவில் அறங்காவலர் சபாபதி வரவேற்றார்.