சபரிமலை: இருமுடி கட்டுடன் சபரிமலை வராதவர்கள் பம்பையில் இருமுடி கட்டுவதற்கு 24 மணி நேரமும் வசதி செய்யப்பட்டுள்ளது. சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு ஊரில் இருந்து இருமுடி கட்ட முடியாதவர்களுக்காக பம்பையில் அதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பம்பை கணபதி கோயில் சமீபம் பக்தர்களுக்கு கழுத்தில் மாலை அணிவித்து கொடுத்து, இருமுடி கட்டு கட்டி கொடுக்கப்படும். 200 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்தால் இருமுடி, நெய் தேங்காய் உள்ளிட்ட இருமுடிக்கு தேவையான எல்லா பொருட்களும் கொடுக்கப்படும். இருமுடிக்கு தேவையான பொருட்கள் கொண்டு வந்தால் 100 ரூபாய் டிக்கெட் எடுத்தால் போதுமானது. பொருட்கள் கொண்டு வந்து பக்தர்களாகவே இருமுடி கட்டினால் அவர்கள் 13 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்தால் போதுமானது. இந்த வசதி பம்பையில் 24 மணி நேரமும் உள்ளதால் பக்தர்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது.