திண்டிவனம்: ரெட்டணை வெண்ணியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திண்டிவனம் தாலுகா, ரெட்டணை கிராமத்திலுள்ள வெண்ணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. இதையொட்டி, காலை 6:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும், 7:30 மணிக்கு பூர்ணாஹூதியும், 8:00 மணிக்கு கலச புறப்பாடும் நடந்தது.
தொடர்ந்து காலை 8:15 மணிக்கு கோபுரத்திலுள்ள கலத்திற்கு சிவாச்சாரியார்கள் மூலம் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வெண் ணியம்மனுக்கும், மற்ற பரிவார சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை, கோவில் தர்மகர்த்தா கிருஷ்ணன் மற்றும் காண்டீபன், ராஜாராம் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.