Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்னுார் செல்வ விநாயகர் கோவில் ... அன்னுார் அனுமான் விக்ரகம் பிரதிஷ்டை விழா! அன்னுார் அனுமான் விக்ரகம் பிரதிஷ்டை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை திருக்கார்த்திகை தீப ஜோதி வழிபாடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 நவ
2015
12:11

உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவிலில், பவுர்ணமி, திருக்கார்த்திகையை முன்னிட்டு, சுவாமிக்கு அபிேஷக அலங்காரம் நடந்தது. மாலையில், 1,008 அகல் விளக்கு ஏற்றி வழிபாடு நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் உள்ள தீப கம்பத்தில், கார்த்திகை ஜோதி ஏற்றப்பட்டது.

Default Image

Next News

தொடர்ந்து, பனை, தென்னை ஓலைகள், மூங்கில், வாழை மற்றும் சோளத்தட்டுகளை கட்டி வைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை ஏற்றப்பட்டது. மடத்துக்குளம், பாப்பான் குளத்தில் உள்ள ஞான தண்டாயுதபாணி கோவிலில், மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், ராஜ அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை உற்சவருக்கு அபிேஷக ஆராதனையை தொடர்ந்து, மகா தீப ஜோதி ஏற்றப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு, உற்சவர் சிறப்பு அலங்காரத்தில், வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மடத்துக்குளம், கணியூர், ஜோதி நகரில் உள்ள ஐயப்பன் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, அதிகாலை, 4:30 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை, 6:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் உள்ள பாலமுருகன் சன்னதியில், சுவாமிக்கு இளநீர், தேன், விபூதி, பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் மற்றும், 21 வகை மூலிகை திரவியங்களில் சிறப்பு அபிேஷகம் நடந்தது. மாலை, 6:45 மணிக்கு, சொக்கப்பனை மற்றும் ஜோதி ஏற்றப்பட்டது.

உடுமலை முத்தையா பிள்ளை லே-அவுட், சக்தி விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள, வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் சன்னதியில், மாலை, 5:30 மணிக்கு, மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திக்கு அனைத்துவித அபிேஷகம் செய்யப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு, மகா தீப ஜோதி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, வெள்ளிக் கவச அலங்காரத்தில், சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள முருகன் சன்னதி, தளி ரோடு, போடிபட்டி, பாலதண்டாயுதபாணி கோவில், நேரு வீதியில் உள்ள காமாட்சி அம்மன் கோவில், தாராபுரம் ரோட்டில் உள்ள ராஜகாளியம்மன் கோவில்களில் கார்த்திகை தீப ஜோதி வழிபாடு நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar