பதிவு செய்த நாள்
01
டிச
2015
11:12
விருத்தாசலம்: சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள ஆழத்து விநாயகருக்கு நேற்று முன்தினம் காலை பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அருகம்புல் மாலைகள் சாற்றி தீபாராதனை நடந்தது. மாலை 4:00 மணியளவில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு, வெள்ளிக்கவசத்தில் தீபாராதனை நடந்தது. அதே போல், காந்தி நகர் நர்த்தன விநாயகர், அய்யனார் கோவில் தெரு வழித்துணை விநாயகர், ஆற்றங்கரை சித்தி விநாயகர், கடலுார் ரோடு விஜய விநாயகர், ரயில்வே காலனி விநாயகர், பெரியார் நகர் விநாயகர் கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.