சாதுக்களும், முனிவர்களும் துõதுவளை கீரை மகிமை வாய்ந்தது என்று கருதினார்கள். ரமணரும் இக்கீரையின் மகத்துவத்தை ஒருவரிடம் கூறியுள்ளர். இதையறிந்த மாதவி என்பவர்,ரமணருக்காக அருணாசல மலையில் ஏறி அதை தேடிக் கண்டுபிடித்து, நெய்யில் வறுத்து கொடுத்தார். ரமணர் கீரையை ருசித்து சாப்பிட்டுக் கொண்டே”சுந்தரமூர்த்தி நாயனார் அவர்களுக்குஇக்கீரையின் மகிமை தெரிந்திருந்தது. அதனால் மோட்சமடைந்தார், என்று அவரது புராணத்தை அந்தப்பெண்மணிக்கு விளக்கினார். அந்த பெண்மணியோ தனக்கும்சீக்கிரம் மோட்சம் கிடைக்கும் எனக்கருதி, அடுத்த நாளும் மலைக்குச் சென்று, அதிக அளவு கீரையைக் கொண்டு வந்து சமைத்து வைத்திருந்தார். வெளியே சென்று வந்த ரமணர், தன் அறையில்நிறைய சமைத்து வைத்திருந்த கீரையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, எதற்கு இவ்வளவு? பெரியகாட்டில் இக்கீரையை தேடி கண்டுபிடித்து எடுத்து வருவது எத்தனை கஷ்டம்? மக்கள் ஏன் என்னை மகிழ்விக்க கஷ்டப்படுகிறார்கள்? வீண் முயற்சி!! என்று சொன்னதைக் கேட்டதும், மாதவிக்கு மிகவும் சங்கடமாகி விட்டது. ரமணரின் அருகில் இருந்த அந்த பெண்ணின் கணவர், இவளுக்கு சீக்கிரம் மோட்சம் கிடைக்கும்என்பதற்காக இப்படி செய்தாள் என்று பவ்யமாக கூறியதும், ஓ அப்படியா? என்று மெல்லியபுன்னகையோடு, அந்த பெண்மணியைப் ரமணர் சற்றுநேரம் உற்று நோக்க, அப்பெண்மணி,அப்போதே மோட்சம் கிடைத்தது போன்று பரவசப்பட்டார். அப்போதிலிருந்து ரமணர் இவரைப்பார்க்கும் போதெல்லாம் ஞானதிருஷ்டி பெற்றதாக உணர்ந்து மகிழ்ச்சியடைந்தார். துõதுவளை கீரையின் மகிமை இப்போதாவது புரிந்ததா...!