திருக்கோவிலுார்: திருவண்ணாமலை பகவான் யோகி ராம்சுரத்குமார் மகராஜின் 97ம் ஆண்டு ஜெயந்தி விழாவில், நேற்று ஏகாதச ருத்ர ஜபம் நடந் தது. பகவான் யோகி ராம்சுரத்குமார் மகராஜின் 97ம் ஆண்டு ஜெயந்தியின் இரண்டாம் நாளான நேற்று காலை 7:00 மணிக்கு பிரதான் மந்திரில் கடஸ்தாபனம், மகன்யாசம், ஏகாதச ருத்ர ஜபம், யாகசாலை பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, கடம் புறப்பாடானது. 11:00 மணிக்கு அதிஷ்டானத்தில் மகா அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, சோடசோபவுபசார தீபாராதனை, சற்குருநாத ஓதுவாரின் தேவாரம் நடந்தது. மாலை 4:30 மணிக்கு பார்வதி பவுலின் பக்தி பாடல்கள் மற்றும் நடன நிகழ்ச்சி, 6:15 மணிக்கு, சாரதாஸ்ரீஹரன் குழுவினரின் இசை கச்சேரி, இரவு 7:45 மணிக்கு வெள்ளி ரதத்தில் உற்சவர் உலா மற்றும் ஆரத்தி நடந்தது.