கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) + ஜூலைக்குள் சாதனை - ஆகஸ்ட் முதல் சோதனை! (100/55)
பதிவு செய்த நாள்
29
டிச 2015 02:12
நட்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் கும்ப ராசி அன்பர்களே!
சூரியன், புதன் ஆகிய கிரகங்கள் சாதகமாக நின்று நற்பலன்களை தரும் நிலையில் இந்த ஆண்டு மலர்கிறது. குருபகவான் தற்போது உங்கள் ராசிக்கு 8ல் இருக்கிறார். வீண் விரோதத்தை உருவாக்குவார். எதிரிகளால் தொல்லை ஏற்படும். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்து பார்வைக்கு பலம் அதிகம் உண்டு. எத்தனை இடையூறு குறுக்கிட்டாலும் அதை குருவின் பார்வை முறியடித்து வெற்றிக்கு வழிவகுக்கும். குருபகவானின் வக்ர காலமாகிய பிப். 7 முதல் ஆக. 1 வரை நன்மை கிடைக்கும். குருபகவான் உங்கள் நட்புகிரகம் என்பதால் கெடுபலன் தர மாட்டார். சனிபகவான் உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. அவரால் தொழிலில் அவ்வப்போது பின்னடைவு ஏற்படலாம். இதை கண்டு அச்சம் கொள்ள வேண்டாம். சனி பகவான் மார்ச் 28 முதல் ஜூலை 14 வரை வக்கிரத்தில் சிக்குகிறார். இந்த காலத்தில் கெடுபலன் உண்டாகாது. ராகு ஜன. 8ல் 7-ம் இடமான சிம்மத்திற்கு செல்கிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல.
திடீர் இடப்பெயர்ச்சியைச் சந்திக்க நேரலாம். கேது ஜன. 8ல் உங்கள் ராசிக்கு வருகிறார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. முயற்சியில் தடை, உடல் உபாதை ஏற்படலாம். சனி, குரு, ராகு, கேது ஆகிய கிரகங்களின் நிலையைக் கொண்டு பொதுவான பலனைக் காணலாம். ஆண்டின் முற்பகுதியில் புதிய முயற்சியில் ஈடுபட்டால் அதில் சாதனை படைப்பீர்கள். ஜூலை மாதத்துக்கு பிறகு எதையும் பலமுறை சிந்தித்து செயல்படுத்துங்கள். பெரியோர்களின் அறிவுரையைக் கேட்டு பெறுங்கள். மதிப்பு, மரியாதை சிறப்பாகவே இருக்கும். பணப்புழக்கம் சீராக இருக்கும். குடும்பத் தேவை பூர்த்தியாகும். ஆண்டின் பிற்பகுதியில் செலவும் அதிகரிக்கும். சிக்கனத்தைப் பின்பற்றுவது நல்லது. பிப்ரவரி முதல் ஜூலைக்குள் புதுவீடு கட்டவோ, வாங்கவோ யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறும். விருந்து, விழா என சென்று மகிழ்வீர்கள். உங்கள் முன்னேற்றத்துக்கு பெண்கள் உறுதுணையாக இருப்பர். ஜூலை மாதத்திற்கு பிறகு சுப விஷயத்தில் தாமதம் ஏற்படும்.
தொழில், வியாபாரம்: வியாபாரத்தில் விடாமுயற்சியும், கடின உழைப்பும் தேவைப்படும். எதிரிகளால் அவ்வப்போது பிரச்னை தலை துõக்கலாம்.மார்ச் 28 முதல் ஜூலை 14 வரை பொருளாதார வளம் சீராக இருக்கும். அச்சுத்துறை, கம்ப்யூட்டர் போன்ற தொழில்கள் முன்னேற்றம் அடையும். ஜூலை மாதத்திற்கு பிறகு ஒப்பந்தம் பெறுவதில் காலதாமதம் உண்டாகும். பங்குதாரர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு. வியாபார விஷயமாக வெளியூர் பிரயாணம் மேற்கொள்ள நேரிடும்.
பணியாளர்கள்: பணியாளர்கள் இந்த ஆண்டின் பிப்ரவரி முதல் ஜூலை வரை திருப்திகரமான நிலையில் இருப்பர். விரும்பிய இடத்திற்கு மாற்றம், பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். வேலை இன்றி இருப்பவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். ஆனால் ஜூலை மாதத்துக்கு பின் நிலைமை மாறுபடும். எதிர்பார்த்த பலனை காண முடியாது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம், பணிச்சுமை ஏற்படும்.
கலைஞர்கள்: புதிய ஒப்பந்தம் கிடைக்க அதிக முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும்.பிப்ரவரி முதல் ஜூலை வரை கலைஞர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். புகழ், பாராட்டு போன்றவை வந்து சேரும். அரசியல்வாதிகள்: அரசியல்வாதிகள் சிறப்பான நிலையில் இருப்பர். ஆண்டின் பிற்பகுதியில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். கவுரவத்துக்கு பங்கம் வரும் நிலை உருவாகாது.
மாணவர்கள்: ஆண்டு முழுவதும் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். குருவின் பார்வையால் முயற்சிக்கேற்ற வளர்ச்சி இருக்கும். சிலருக்கு உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கலாம்.
விவசாயிகள்: உழைப்பை விட சற்று குறைந்த வருமானமே கிடைக்கும். ஆண்டின் முற்பகுதியில் நெல், கேழ்வரகு, சோளம், கோதுமை, மஞ்சள் மற்றும் மானாவாரி போன்ற பயிர்கள் மூலம் நல்ல மகசூலை காணலாம். ஜூலை மாதத்துக்கு பிறகு அதிக செலவு பிடிக்கும் பயிர்களை தவிர்க்கலாம்.
பெண்கள்: குடும்பத்தை பொறுத்த வரை விட்டு கொடுத்து போவது நல்லது. ஆண்டின் முற்பகுதியில் நல்ல பலனை காணலாம். குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள் செல்வாக்கோடு இருப்பர். ஆண்டின் பிற்பகுதியில் பணிச்சுமைக்கு ஆளாக நேரிடும்.
பரிகாரம்: குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடுங்கள். சனி, ராகு,கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். முருகனுக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுங்கள். ஏழை மாணவர்களின் படிப்புக்கு உதவி செய்யுங்கள். துர்க்கையை ராகுகாலத்தில் வழிபடுங்கள்.
செல்ல வேண்டிய கோவில்: பழநி தண்டாயுதபாணிசுவாமி கோவில்
|