Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை கோவிலில் உத்தராயண ... திருநாகேஸ்வரத்தில் ராகு பெயர்ச்சி விழா! திருநாகேஸ்வரத்தில் ராகு பெயர்ச்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் 15ம் தேதி மாலை 6.35க்கு மகரஜோதி விழா!
எழுத்தின் அளவு:
சபரிமலையில் 15ம் தேதி மாலை 6.35க்கு மகரஜோதி விழா!

பதிவு செய்த நாள்

07 ஜன
2016
10:01

சபரிமலை: சபரிமலையில் வரும் 15-ம் தேதி அதிகாலை 1.27 மணிக்கு மகர சங்கரம பூஜையும், மாலை 6.35 மணிக்கு மகரஜோதி விழா நடக்கிறது. சபரிமலையில் தற்போது மகரவிளக்கு கால பூஜைகள் நடைபெற்று வருகிறது. மகரவிளக்கு காலத்தில் பெரும்பாலான பக்தர்களும் எருமேலியில் பேட்டை துள்ளி பெருவழிப்பாதை வழியாக பம்பை வருகின்றனர். இதனால் பத்தணந்திட்டை-சாலக்கயம் வழியாக பம்பை வரும் ரோட்டில் வாகனங்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. எருமேலியில் பேட்டை துள்ளும் பக்தர்கள் அழுதை, கரிமலை, வலியானவட்டம் வழியாக பம்பை வருகின்றனர். பம்பை வந்த பின்னர் இவர்கள் பம்பையில் உணவு சமைத்து விருந்து உண்ட பின்னர் நீலிமலை, அப்பாச்சிமேடு வழியாக சன்னிதானம் வருகின்றனர். பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகமாக உள்ளதால் பக்தர்கள் ஐந்து மணி நேரம் வரை கியூவில் நின்றுதான் 18--ம் படியேற வேண்டியுள்ளது. வரும் 15-ம் தேதி மகரஜோதி விழா நடக்கிறது. பந்தளத்தில் இருந்து வரும் திருவாபரணங்கள் அன்று மாலை 6.25 மணிக்கு சன்னிதானம் வந்தடையும். தொடர்ந்து திருவாபரணங்கள் ஐயப்பனின் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். தீபாராதனை முடிந்து சில வினாடிகளில் பொன்னம்பலமேட்டில் மகரநட்சத்திரம் வானில் ஒளிவிட்டு பிரகாசிக்கும். தொடர்ந்து மகரஜோதி மூன்று முறை காட்சி தரும். மகரவிளக்கு நாளில் ஐயப்பனுக்கு நடைபெறும் முக்கியமான பூஜை மகர சங்கரம பூஜை. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு கடக்கும் முகூர்த்தத்தில் நடைபெறும் முக்கிய பூஜையாகும். இந்த நேரத்தில் திருவிதாங்கூர் அரண்மனையில் இருந்து சிறப்பு துாதர் மூலம் கொடுத்து அனுப்பப்படும் நெய் தேங்காய்கள் உடைக்கப்பட்டு ஐயப்பனுக்கு நேரடியாக அபிஷேகம் நடைபெறும். இந்த ஆண்டு இந்த பூஜை 15-ம் தேதி அதிகாலை 1.27 மணிக்கு நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar