பதிவு செய்த நாள்
13
ஜன
2016
02:01
எதிலும் சிந்தித்து செயல்படும் ரிஷப ராசி அன்பர்களே!
குரு பிப். 6 வரையும் , சுக்கிரன் ஜன. 20க்கு பிறகும் சாதகமாக நின்று நற்பலனை கொடுப்பார்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும். புத்தாடை, நகை வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். செவ்வாய் தரும் நன்மைகள் தொடரும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. காரிய அனுகூலம் ஏற்படும். பிப்.6க்கு பிறகு வீண்விவாதங்களை தவிர்க்கவும். சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம்.
பொறுமையுடன், விட்டுக் கொடுத்து போகவும். செலவு அதிகரிக்கும். பிப். 7 முதல் குரு பகவான் வக்கிரம் அடைவதால் செலவுகள் அதிகரிக்கும். கிரக நிலைகளின் அடிப்படையில் வீட்டில் மகிழ்ச்சி குடிகொண்டிருக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும். வீடு, மனை வாங்க யோகம் கூடி வரும். வீட்டிற்கு தேவையான சகல வசதிகளும் கிடைக்கும்.
தொழில், வியாபாரத்தில் லாபத்திற்கு குறை இருக்காது. போட்டியாளர்களின் தொல்லையில் இருந்து விடுபடலாம். அரசு வகையில் இருந்த இடர்பாடுகள் மறையும். மாத பிற்பகுதியில் அதிக அலைச்சல் இருக்கும். பணவிஷயத்தில் கவனமாக இருக்கவும். புதிய முதலீடை தவிர்க்கவும். ஜன. 31, பிப்.1 ல் எதிர்பாராத வகையில் பணம் வரலாம்.
பணியாளர்களுக்கு அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும். பிப். 3க்கு பிறகு வேலைப்பளு அதிகரிக்கும். உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். சிரத்தை எடுத்தால்தான் கோரிக்கைகள் நிறைவேறும். பிப். 9,10ல் எதிலும் வெற்றி காணலாம்.
கலைஞர்கள் சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும். பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் மறையும்.
அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவியை பெறலாம்.
மாணவர்கள் மாத முற்பகுதியில் புதனின் அருளால் சிறப்பான பலனை காண்பர். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பிப். 6க்கு பிறகு படிப்பில் அதிக கவனம் செலுத்தவும்.
விவசாயிகளுக்கு பழம், கீரை வகைகளில் நல்ல வருவாய் கிடைக்கும். புதிய சொத்து வாங்க நினைப்பவர்கள் இந்த மாதத்தை பயன்படுத்திக் கொள்ளவும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
பெண்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். நகை வாங்கலாம். கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு கிடைக்கும்.
நல்ல நாள்: ஜனவரி15,16,19,20,24,25,31 பிப்ரவரி1,2,3,4,9,10,11,12.
கவன நாள் : பிப். 5,6 சந்திராஷ்டமம், கவனம்
அதிர்ஷ்ட எண்: 4,6 நிறம்: சிவப்பு, பச்சை.
பரிகாரம்: தினமும் காலையில் சூரியனை வணங்குங்கள். சனிக்கிழமை ஆஞ்சநேயரையும், பஞ்சமி திதி நாட்களில் நாக தேவதையையும் வணங்கி வாருங்கள்.