மைசூரு: வரலாற்று பிரசித்தி பெற்ற, நஞ்சன்கூடு ஸ்ரீகண்டேஸ்வரர் கோவிலில் பார்வதி அம்மன் சன்னிதியில் கலசம் பிரதிஷ்டை செய்யப்பட்டதை அடுத்து, மூன்று நாள் ஹோமம் நாளை துவங்குகிறது. மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடு ஸ்ரீகண்டேஸ்வரர் கோவிலில், பார்வதி அம்மனின் கோவில் கலசம் பிரதிஷ்டை செய்யப்படாமல், 23 ஆண்டுகளாக தனியாக வைக்கப்பட்டிருந்தது. கடந்த டிசம்பர், 6ம் தேதி, கலசம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அபிஷேக தண்ணீர் சரியாக வெளியே செல்லாததால், சுமூகமாக செல்வதற்கான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து ஜீர்ணோத்தாரண ஹோமங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டன. இதற்கு அறநிலைய துறையும் ஒப்புதல் அளித்துள்ளது. புரோகிதர்களின் உதவியுடன் நடத்தப்படும் ஹோமத்துக்கான செலவை டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. முதல் ஹோமம் நாளை நடத்தப்படுகிறது. 7, 8ம் தேதிகளில், சண்டி ஹோமம், ருத்ர ஹோமம் நடத்தப்படுகிறது.