Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமநாதபுரம் ராமகிருஷ்ண சேவா ... திண்டுக்கல்லில் கோலாகலம்: பூச்சொரிதலுடன் துவங்கிய கோட்டை மாரியம்மன் திருவிழா! திண்டுக்கல்லில் கோலாகலம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அபூர்வ சனிப்பிரதோஷம்: சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு!
எழுத்தின் அளவு:
அபூர்வ சனிப்பிரதோஷம்: சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு!

பதிவு செய்த நாள்

06 பிப்
2016
10:02

தமிழகம் முழுவதும், 30 ஆண்டுகளுக்கு பின், சிவன் கோவில்களில் அபூர்வ சனிப்பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. சிவன் கோவில்களில், சனிப்பிரதோஷ வழிபாடு முக்கியமானது. மாலை, 4:30 - 6:00 மணிக்குள் சிவபெருமான் முன், ஆன்மாவின் ரூபமாக விளங்கும், நந்தி பகவானுக்கு நடைபெறும் வழிபாடு தான், பிரதோஷ வழிபாடு என்றழைக்கப்படுகிறது. தேவர்களும், அசுரர்களும் அமுதத்தை உண்பதற்காக, வாசுகி என்ற பாம்பை மத்தாக்கி, திருப்பாற்கடலை கடைந்தபோது, அதில்இருந்து அமுதம் திரண்டுவரும் முன் ஆலகால விஷம் தோன்றியது.

இதைக் கண்டு, தேவர்களும், அசுரர்களும் அஞ்சி நடுங்கினர். அப்போது, சிவபெருமான் தோன்றி, ஆலகால விஷத்தை உண்டு, தேவர்களையும், அசுரர்களையும் காப்பாற்றினார்.மேலும், தன் வாகனமான நந்தியின் கொம்புகளுக்கு இடையே, ஆனந்த நடனமாடி அனைவருக்கும் காட்சியளித்தார். சிவன் ஆனந்த நடனமாடிய நேரமே, பிரதோஷ வழிபாடாக கோவில்களில் கடைபிடிக்கப்படுகிறது.சனிக்கிழமை தேய்பிறை திரியோதசி நாளில் தான், சிவபெருமான் ஆலகால விஷம் உண்டு, பக்தர்களை காப்பாற்றினார் என்று சொல்லப்படுவதால், இந்த நாளில் பக்தர்கள் பிரதோஷ வழிபாடு நடத்துகின்றனர். அந்த வகையில், தை மாத தேய்பிறை பிரதோஷம், இன்று சனிக்கிழமை வருகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், சனி மகாபிரதோஷ வழிபாடு, இன்று மாலை, 4:30 மணிக்கு மேல், 6:00 மணிக்குள் நடக்கிறது. இது குறித்து, தி.மலை சிவாச்சாரியார் சுப்பிரமணிய பட்டர் கூறியதாவது:சூரியன் வடக்கு நோக்கி நகரும் புண்ணிய காலமான தை மாதத்தில், அமாவாசை, திருவோண நட்சத்திரம், திங்கள் கிழமை, வியதியபாத திதி ஆகியவை இணைந்து வருகின்றன. இந்த அபூர்வ நாள், 30 ஆண்டுகள் கழித்து வருவதால், மிகவும் புனித நாளாகக் கருதப்படுகிறது.இந்த நாளுக்கு முன்னதாக வரும், சனி மகா பிரதோஷம் புனித மாகக் கருதப்படுவதால், சிவன் கோவில்களில் பிரதோஷ நேரத்தில் வழிபடுவது சிறப்பு, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை; கோவையின் குலதெய்வம் என போற்றப்படும் தண்டு மாரியம்மன் கோவில்சித்திரை விழா கடந்த 15ம் முதல் நடந்து ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவிலில் சித்திரை சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, அம்மையார் ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்; இயற்கை எழில் கொஞ்சும் கங்கையாற்றின் கரையில் அமைந்திருக்கும் சிறப்பு மிக்க ஆன்மீக தலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar