கதிர்காமம் முத்துமாரியம்மன் கோவிலில் செடல் உற்சவ விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06பிப் 2016 11:02
புதுச்சேரி: கதிர்காமம் முத்துமாரியம்மன் கோவில் செடல் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். கதிர்காமம் முத்துமாரியம்மன் கோவில் செடல் உற்சவ விழா ஜன.28ம் தேதி, துவங்கியது. தினமும் சுவாமி வீதியுலா நடந்தது.செடல் உற்சவத்தையொட்டி நேற்று காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. 10 மணிக்கு முத்துப்பல்லக்கில் அம்மன் வீதியுலாவும், பகல் 12 மணிக்கு செடல் உற்சவம் நடந்தது. வேண்டுதலின்பேரில், பக்தர்கள் தங்கள் உடலில் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி, மேட்டுப்பாளையத்தில் இருந்து கதிர்காமம் வரும் சாலையில் போக்குவரத்து மாற்றப்பட்டது. இருப்பினும், ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்ததால், வழுதாவூர் சாலையில் நெரிசல் ஏற்பட்டது. திருவிழாவிற்கு வந்த பக்தர்களுக்கு பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவையொட்டி, மாலை 6:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை கோவில் விழாக் குழுவினர் மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.